Sunday, April 12, 2015

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக பீரங்கி வெங்கடேசனிடம் தீவிர விசாரணை!

ஓட்டுநர்கள் பணி நியமனம் தொடர்பாக கொடுக்கப்பட்ட அழுத்ததால் நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், முன்னாள் வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோரை கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பீரங்கி வெங்கடேசனை பிடித்துள்ள சிபிசிஐடி போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். 

இந்த விசாரணையின்போது பீரங்கி வெங்கடேசனிடம் இருந்து பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவினரில் முக்கிய நபரான பீரங்கி முருகேசன் இருந்ததாகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் சார்பாக நெல்லையில் உள்ள முத்துக்குமாரசாமியின் வீட்டுக்கு பலமுறை பீரங்கி வெங்கடேசன் சென்றுள்ளார் என்றும், முத்துக்குமாரசாமியும், அவரது மனைவியும் மிரட்டப்பட்டதாகவும் சிபிசிஐடி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதனை முத்துக்குமாரசாமியின் மனைவி சிபிசிஐடி உயர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளதால், பீரங்கி வெங்கடேசன் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment