Sunday, April 12, 2015

சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


                                     காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. எஸ்.எம்.எஸ். அழைப்புகள் மூலம் மட்டும் இதுவரை 31 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உறுப்பினர் சேர்க்கைக்கு கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வரும் 13-ந் தேதி டெல்லியில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தலைமையில் மகா தொடர்பு இயக்க கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் குறித்தும் அவர்களது பங்கு குறித்தும் பயிற்சி நடைபெற உள்ளது. 

இதை தொடர்ந்து இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தில் மாநில, மண்டல, கிளை அளவிலான மகா தொடர்பு இயக்கம் நடைபெறும். இது, வரும் 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தொண்டர்களுக்கு மிக எளிதாக இருக்கும்.

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க பா.ஜ.க. தயாராக உள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்றார்.

No comments:

Post a Comment